Thursday, November 28, 2013

சிவப்புக்கோடு!





ழகு மிகுந்தசேலைகட்டி
அதற்கு ஏற்ற பொட்டும் வைத்து
அரைநொடியில் முகம் திருத்தி
அவசரமாய்ப் பள்ளிசெல்லும்
உயிருள்ள இயந்திரம் நான்!


திகாலை கண்விழித்து
அரையிருட்டில் அடுப்பெரித்து
விடியும்வரை வாசல்கூட்டி
வெளிச்சம்வர கடைக்கு ஒடி
கட்டிலருகே தேனீர் வைத்து
கணவனைத் துயிலெழுப்பும்
கலியுகத்து நளாயினி நான்!


ரவிரவாய்க் குறிப்பெழுதி
இடதுகையால் தொட்டிலாட்டி
குழாய்நீரில் துணிதுவைத்து
குளிக்கும்போது அழுதுதீர்த்து
படியேறித்துணி உலர்த்தி
பாதம்நோக மடித்துவைக்கும்
பற்றரியில்லா ரோபோ நான்!


குழந்தைகளை வெளிக்கிடுத்தி
குழப்படிக்குப் பதில்கொடுத்து
அவசரத்தில் பவுடர் அப்பி
ஆட்டோவுக்குள் தலைசீவி
கடிகார முள்ளோடும்
சதிராடிப் போராடும்
சாட்டையில்லாப் பம்பரம் நான்


சிவந்து வயிறுகிள்ள
பாணோடு பன்னும் வாங்கி
பாதியிலே கடித்து விழுங்கி
கதவோரம் செருப்புத்தேடி
தெருமுனையில் பஸ்பிடித்து
பந்தயத்துக் குதிரைபோலே
பாய்ந்துநானும் ஓடிவந்தால்...
வருகைதரும் பதிவேட்டில்
இரக்கமின்றிச் சிரித்திருக்கும்- அந்த
இதயமில்லாச் சிவப்புக்கோடு!


-மூதூர் மொகமட் ராபி